A trek to Porivarai Cave offers insight into prehistoric life. The location is 40 kilometer from Kothagiri and accessible via a 3-kilometer hike. It features around 500 rock paintings from the Mesolithic age, the largest prehistoric rock art site in South India, showcasing animals, archers, battles, and spirals. The area is also known for its traditional honey-gathering methods from steep rocks.
KEY ATTRACTIONS IN THE NEIGHBORHOOD
Maximum Elevation: 1500 MSL(Approx.) Meters
Forest Type: Moist Deciduous Forest
Nearby Medical Facility: Sholurmattam PHC - 11 km
Nearby Bus Stand: Kotagiri - 25 km
Nearby Airport: Coimbatore - 90 km
Nearby Railway Station: Mettupalayam - 54 km
Parking Facilities: Yes
கர்நாடகாவையும் தமிழ்நாட்டையும் தெற்கே புவியியல் அமைப்பில் இரண்டாக பிரிப்பதும் நீலகிரியையும் சத்தியமங்கலத்தையும் இரண்டாகப் பிரிப்பதும் “மாயாறு”தான். பவானி ஆறும் நீலகிரி மலைத்தொடர்களில் உருவாகி கேரளத்தில் நுழைந்து மீண்டும் மேட்டுப்பாளையம் வழியாக வழிந்தோடி கோத்தகிரியின் மலைகளைச் சுற்றி வளைந்து பவானிசாகர் அணையை வந்தடைகிறது. மாயாறும் முதுமலை தொட்டு கோடநாடு வழியாக தெங்குமரஹடா வந்து பவானிசாகர் அணையை அடைகிறது. மாயாறும் பவானியும் தனித்தனியாக நீங்கள் கண்டிருக்கக் கூடும். பவானிசாகர் அணையையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் பவானி, மாயாறு இவையிரண்டின் சங்கமத்தை நீங்கள் கண்களால் பருந்துப்பார்வையில் காண வேண்டுமானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் கரிக்கையூர். கரிக்கையூரில் அமைந்துள்ள பொறிவறை ஓவியங்களைக் காண வேண்டுமானால் முதலில் Trek Tamilnadu வலைப்பக்கத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஆளொன்றிற்கு 1150 கட்டணமாக பெறப்படுகிறது. கோவையில் இருந்து சரியாக 3-4மணி நேரத்தில் கரிக்கையூரை அடையலாம். காலை 7-8 மணிவரை மட்டுமே நீங்கள் செல்ல முடியும் என்பதால் கோத்தகிரியை ஒருநாள் முன்னேரே அடைந்து ஓய்வெடுத்து அடுத்தநாள் காலை கரிக்கையூர் செல்வது நலம். பாதைகள் சிதிலமடைந்து காணப்படுவதால் அதற்கேற்ப வாகனங்கள் இருப்பது சிறப்பு. இருசக்கர வாகனத்திலும் செல்ல இயலும். வன விலங்குகளின் நடமாடும் பகுதி என்பதால் மிக கவனம் தேவை. கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் செல்லும் வழியில் சோலூர்மட்டம் வன அலுவலகத்தில் இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு கரிக்கையூர் டிரெக்கிங் பாயிண்ட் அலுவலகத்தை அடைந்து சிறிது நேர ஓய்வுக்குப்பின் டிரெக்கிங் துவங்கும். பயணத்தில் வழிகாட்டி இருவர் வழிநெடுக கரிக்கையூர் பற்றியும் வனவிலங்குகள் பற்றியும் பழங்குடியினர்கள் பற்றியும் பேசும்போதுதான், நமக்கு காட்டைப் பற்றிய புரிதல் மிகக்குறைவுதான் என்பது தெளிவாகும். வழியில் கரடியின் எச்சங்களையும் யானை உறித்துச் சுவைத்த மரப்பட்டைகளையும் கண்டு காட்டிற்குள் நடந்து செல்வது என்பது அலாதியான அனுபவம்தான். வழியில் வற்றிய சுனைகளில் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சிகள்,காட்டுப் பறவைகளின் கீச்சொலிகள், காட்டின் அடர்ந்த மரங்களின் காய்ந்த இலைச்சருகுகளில் கால்வைத்து நடக்கும்போது எழும் ஒலிகள் நமக்கே சற்று நடுக்கத்தை வரவைக்கும். வழிப்பாதைகள் ஏற்ற இறக்கங்களோடு செல்வதால் கால்களின் வலியை உணர இயலும். பொரிவறை பாறையைக் கண்டவுடன் நடந்து வந்தபாதை, அதிலிருந்த சிரமங்கள் யாவையும் மறைந்து விடும். 500 அடி அகலமும் 150 அடி உயரமும் கொண்ட ஒற்றைப் பாறை. நீண்டு இருக்கும். அதுதான் மலை உச்சி. மலைமுகடுகளில் தேன் பூச்சிகள் வழக்கமாகக் கூடு கட்டும். நீங்களும் பார்த்திருக்கக் கூடும். இந்தப் பொறிவறை பாறையிலும் தேன்கூடுனானது எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இருளர்கள் அந்த மலைமுகடுகளில் இருக்கும் கொடிகள்,வேர்களைப் பயன்படுத்தி 5000 ஆண்டுகளுக்கு முன் தொட்டு காலங்காலமாக அவர்கள் தேனெடுத்திருந்த பொறிவறையின் பாறையில் இப்போதும் தேன் கூடு கட்டியிருந்தது. எடுக்கவே முடியாத உயரத்தில் இருக்கும் அந்தத் தேனை எப்படி எடுத்திருப்பார்கள் என்பதை கற்பனை கூட செய்ய இயலவில்லை. பொறிவறையில் மொத்தம் 600 ஓவியங்கள் உள்ளன. அதில் 340 மனிதர்கள். 109 மாடு மற்றும் எருமைகள். 106 மான்கள். 22 குதிரைகள்(குதிரைகள் என்பது தவறானது என்பது என்கருத்து. கழுதைகளாக இருக்கலாம். ஏனெனில் 3500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆரியர்களால் குதிரைகள் இந்தியாவிற்கு கொண்டுவந்தார்கள். எனவே 5000 வருடங்களுக்கு முன் குதிரைகள் இருந்திருக்காது) 7 குரங்குகள். 5 யானைகள். 2 புலி/சிறுத்தை. இந்த ஓவியங்கள் விலங்குகளின் கொழுப்பு மற்றும் குருதி, மரப்பிசின்கள், செம்மண் மற்றும் வெண்கற்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வரைந்திருக்கிறார்கள். ஓவியங்களில் அவர்கள் வில் அம்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கேடயமும் அரிவாளைப் போன்ற ஆயுதத்தை வைத்திருக்கின்றனர். இடை கற்காலம் என்பதால் இரும்பைப் பயன்படுத்தினார்களா? அல்லது மரத்தால் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. பறைக்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இசைத்து நடமாடுவதையும் வேட்டையாடுவதையும் அவர்கள் அன்றாட வாழ்வியல்களையும் வரைந்து வைத்துள்ளனர். அவர்கள் பொறிவறையிலேயே தங்கி வாழ்ந்திருக்கலாம். அல்லது தேனெடுக்க வரும் வேளையில் ஓய்வெடுக்கும்போது இவ்வோவியங்களைத் தீட்டியிருக்கலாம். ஒவ்வொரு ஓவியத்தையும் நீங்கள் காணும்பொழுது அவர்கள் வாழ்ந்தகாலத்திற்கே உங்களை அழைத்துச் சென்று அவர்களில் ஒருவராய் வாழ்ந்துவிட்டு, வேட்டையாடுவதையும் நடனமாடுவதையும் ஆயுதங்கள் பயன்படுத்துவதையும் விலங்குகளின் மோதல்களையும் உங்கள் கண்களுக்குள் நிறுத்துவதோடு மட்டுமில்லாது அந்த கோட்டோவியங்களும் அவர்களின் வாழ்வியலும் மனம் முழுவதும் காலமெல்லாம் நிறைந்திருக்கும்.
Excellent trek. Thyagraj, Prakash, Kanna and Mayakrishna were helpful experts and very considerate guides who knew the terrain very well. Fantastic feeling seeing 5000+ year-old rock-paintings, treading the same path our first ancestors did. View of Bhavanisagar Dam surroundings was breathtaking. Some suggesstions: (1) Keep Office at Kil Kotagiri open till last visitor into the jungle returns and signs out (2) Provide 4WD vehicle to transport trekkers to Karikayur village, where trek starts (3) Provide nourishment for diabetics and BP sufferers -- Plain Buttermilk, Unsweetended Apple juice, Rusk/Cracker biscuit (4) Clear trail a bit, put in handrails and (maybe) cut steps into some steep slopes to make trek friendly and safe for ALL people -- school and college students who learn about rock-paintings, general public who maynot be trekkers but are interested in culture and history, even people above 70 years of age if they are not infirm. This trek was a wonderful experience. From the view point of nature and cultural history. I hope the TN Forest Dept will find a balance so that this site can be popularised amongst schools, colleges and abroad. India is a country rich in culture and traditions. It would be good to let the world come and see it, without them fearing for their safety or inability to experience any of this.